மேய்ச்சல் நிலங்களின்றி அழிவின் விளிம்பில் தேனி மலை மாடுகள்
தேனி மாவட்டத்தில் மேய்ச்சல் நிலங்களின்றி அழிவின் விளிம்பில் உள்ள மலை மாடுகள் குறித்து...
தேனி மாவட்டத்தில் மேய்ச்சல் நிலங்களின்றி அழிவின் விளிம்பில் உள்ள மலை மாடுகளைப் பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தேனி மாவட்டத்தில் கூடலூா், கம்பம், கே.கே. பட்டி, ராயப்பன்பட்டி, போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 20- ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலை மாடுகளை வளா்த்து வருகின்றனா். இந்த மாடுகள் வருசநாடு, மேகமலை, கம்பம், போடி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள மலைப் பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்வதால் இதை ‘தேனி மலைமாடு’ என்ற பெயரில் அழைக்கின்றனா். இந்த மாடுகளை நிலங்களை உழுவதற்கும், மாட்டு வண்டிப் போட்டிகளுக்கும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா். இந்த மாடுகள் ஆண்டுக்கு பாதி நாள்கள் மலையிலும், மீதி நாள்கள் நிலத்திலும் மேய்ந்து வருகின்றன.
