காலியாகும் அணைகள்... கருகும் தேயிலை...
தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள்! - தாகத்தில் தவிக்கும் நீலகிரி...
தென்னகத்தின் தண்ணீர்த் தொட்டியான நீலகிரி, இன்று தண்ணீருக்காகத் தவிக்கும் நிலமாக மாறிவிட்டது. பொய்த்துப்போன தென்மேற்குப் பருவமழை, வறண்டுகிடக்கும் அணைகள், குடிநீருக்காக அல்லாடும் மக்கள், தண்ணீரைத் தேடி அலையும் வனவிலங்குகள், கருகும் மலைக் காய்கறிகள், சருகாக உதிரும் காபிப் பூக்கள் என வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கிறது மலை மாவட்டம். அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியோடு, வானத்தைப் பார்த்தபடி காத்திருக்கிறார்கள் நீலகிரி மக்கள்.
குளிர் தேசத்தில் ஃபேன் போடும் நிலை!

