டிசம்பருக்குள் தமிழகத்தில் மாற்றம் வரும்: மணிமாறன் எம்.எல்.ஏ., கணிப்பு
திருமங்கலம்: தமிழகத்தில் வரும் டிசம்பருக்குள் பெரிய மாற்றம் வரும்'' என, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் எம்.எல்.ஏ., பேசினார்.
மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்தது. தலைமைக் கழக பிரதிநிதிகள் செல்வராஜ், ரவீந்திரன், ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி, சண்முகம், மதன், நகரச் செயலாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டனர்.
மணிமாறன் பேசியதாவது : உலகத்திலேயே தி.மு.க., போன்ற கட்டமைப்புள்ள இயக்கம் வேறில்லை. மக்கள் ஒரு மாயையை நம்பி ஓட்டளித்து விட்டனர். அதன் விளைவை ஒரு சட்டசபை கூட்டத் தொடரிலேயே மக்கள் உணர்ந்து விட்டனர். ஒரு முதலமைச்சராக இருப்பவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சட்டசபையில் பதிவு செய்கிறார்.


