வெவ்வேறு இடங்களில் விபத்துகள் படுகாயம் அடைந்த 3 பேர் உயிரிழப்பு
மேட்டூர்: ஓமலுார், தொளசம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே வசிப்பவர் மகேந்திரன், 42. மேச்சேரி அடுத்த, 5வது மைலில், சில்லி கடை வைத்துள்ளார். இவரது மாமா, மேச்சேரி, கிழக்கு ஓலைப்பட்-டியை சேர்ந்த, கூலித்தொழிலாளி ராமு, 48. கடந்த, 2 மாலை, டி.வி.எஸ்., மொபட்டில், ராமு, மகேந்திரன், ஓமலுார் சென்று விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மகேந்திரன் ஓட்டினார். 5வது மைல் - தொளசம்பட்டி சாலையில், கண்ணம்மா கடை அருகே வந்தபோது, முன்புறம் சென்ற பைக் திடீரென நின்றது. அந்த பைக் மீது மோதாமல் இருக்க, மொபட்டை இடது பக்கம் திருப்பியபோது, முன்புறம் சென்ற பைக் மீது மோதியது. ராமுவுக்கு தலையிலும், மகேந்திர-னுக்கு நெற்றியிலும் காயம் ஏற்பட்டது. இதில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமு, நேற்று முன்தினம் உயிரிழந்தார். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.ஆம்புலன்ஸ் மோதல்
தாரமங்கலம் அருகே தொளசம்பட்டி, தாசன்காட்டு வளவை சேர்ந்த, கூலித்தொழிலாளி சண்முகம், 40. இவர், புதிதாக டியோ மொபட்டை எடுத்துக்கொண்டு, கடந்த ஆக., 17 மாலை, 4:00 மணிக்கு நங்கவள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார்.