சாலையோரம் அசல் இத்தாலிய பீட்சா நோ டாப்பிங்ஸ், நோ சைடிஷ்
ரோட்டோர கடைன்னாலே டீ, பஜ்ஜி, பானிபூரி தான் நினைவுக்கு வரும். ஆனால், இப்போது அதே ஸ்ட்ரீட் ஷாப் ஸ்டைலில் இத்தாலிய பீட்சாவை கொடுத்து அசத்தி வருகிறது ‘விவாசே பிஸ்ஸேரியா’!
இத்தாலியில் பீட்சா சாப்பிடும் முறையை கற்ற செஃப் சஞ்சய்குமார், சாய்பாபா காலனியில் இதை தொடங்கியுள்ளார். கால்பந்து விளையாடி வந்த சஞ்சய்குமார், தனது எதிர்காலத்துக்காக இத்தாலி சென்றபோது அங்குள்ள பீட்சா கலாசாரத்தை கவனித்துள்ளார்.
இந்தியாவில் பீட்சாவை பெரும்பாலும் ஸ்நாக்ஸ் போல சாப்பிடும் நிலையில், இத்தாலியர்கள் அதை தினசரி உணவாகவே எடுத்துக்கொள்வது அவரை ஆச்சரியப்படுத்தியது.
