ரயில்வே மேம்பால பணிகளால் கனரக வாகனங்கள் செல்ல தடை
சிங்கபெருமாள் கோவில், செப். 11-- செட்டிபுண்ணியம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி
செட்டிபுண்ணியம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால், கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு - தாம்பரம் ரயில்வே தடத்தில், பரனுார் - - சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் இடையே மகேந்திரா சிட்டி - செட்டிபுண்ணியம் ரயில்வே கேட் உள்ளது.
இதனை கடந்து செட்டிபுண்ணியம், வடகால் உள்ளிட்ட கிராம மக்கள் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.



