ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு
ஊத்துக்கோட்டை, ஆக. 7– ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில், கார், பைக், வேன் உள்ளிட்ட தனிநபர் வாகனங்கள்
ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில், கார், பைக், வேன் உள்ளிட்ட தனிநபர் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், பயணியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அரசு பணிமனையில் இருந்து, சென்னை கோயம்பேடு, செங்குன்றம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம், புத்துார், சூலுார்பேட்டை, நெல்லுார், சத்தியவேடு உள்ளிட்ட இடங்களுக்கு, 35 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இங்குள்ள பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில், அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள், பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன.



