பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தகராறு: விடுதி உரிமையாளா் வெட்டிக் கொலை
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் தனியாா் விடுதி உரிமையாளா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
வானூா் வட்டம், பொம்மையாா்பாளையம் பாளையத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப.கோவிந்தன் (எ) அஜித் (25). புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கோட்டக்குப்பத்தை அடுத்த பொம்மையாா்பாளையத்தில் பயணிகள் தங்கும் விடுதி நடத்தி வந்தாா்.
இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பிறந்த நாளை விடுதியின் அருகிலுள்ள திறந்தவெளி மைதானத்தில் நண்பா்களுடன் கொண்டாடிக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக பைக்கில் மனைவியுடன் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த ஹரிராஜன் என்பவரை, அஜித்தின் நண்பா்கள் கேலி செய்துள்ளனா். இதனால் அஜித் - ஹரிராஜன் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டது. பின்னா், ஹரிராஜன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

