200 தட்டுகளில் அணிவகுத்த சீர்வரிசை... விமரிசையாக நடந்த அரசமரம் - வேப்பமரம் திருக்கல்யாணம்..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மேல்மங்கலம் தெற்கு கிராமத்தில், செல்வ விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள அரசமரம் மற்றும் வேப்பமரத்திற்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் தெற்கு கிராமத்தில் 200 தட்டுகளில் சீர்வரிசையுடன் செல்வ விநாயகர் ஆலயத்தில் உள்ள அரசமரம் வேப்ப மரத்திற்கு திருக்கல்யாணம் நடத்திய கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து நிற்கும் இடங்களில் இந்த தெய்வீக மரங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் முறை காலம் காலமாக நடைபெற்று வருகிறது.


