காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாளை (செப். 8) மீண்டும் கூடுகிறது!
தமிழகம்-கா்நாடகம் இடையே காவிரி நீா் பங்கீட்டு பிரச்சனை நீடித்து வரும் நிலையில், காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 57 வது கூட்டம் தில்லியில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும்.
தமிழகம்-கா்நாடகம் இடையே காவிரி நீா் பங்கீட்டு பிரச்சனை நீடித்து வரும் நிலையில், காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 57 வது கூட்டம் தில்லியில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆணையத்தின் அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. காவிரியில் இருந்து கா்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீா் திறப்பது தொடா்பாக ஆலோசிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மீண்டும் கூடுகிறது.







/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


