போலீஸ் செய்திகள்
* ராணுவ வீரருக்கு ஆறு மாதம் சிறை திருமங்கலம்: பேரையூர் அரசமரம் முக்கு ரோடு பகுதி ராஜேஷ் கண்ணன் 25, ராணுவ வீரர். இவர் 2012ல் பேரையூர் விஜயராணி திருமண மண்டபம் அருகே மது போதையில் தகராறு செய்தார். விசாரணைக்கு சென்ற போலீசார் நல்லதம்பி, முத்துக்குமரனை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பேரையூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருமங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. அரசு வழக்கறிஞர் மூவேந்திரன் ஆஜரானார். இதில் ராஜேஷ் கண்ணன் மீது பதிவான கொலை முயற்சி பிரிவுகளில் விடுதலை செய்யப்பட்டார். பொது இடத்தில் அத்துமீறியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆறு மாதம் சிறை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பிரபாகரன் தீர்ப்பளித்தார்.
* திருமண நேரத்தில் மணமகள் கடத்தல் திருமங்கலம்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சுந்தரங்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண பெருமாள் 27. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணும் 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். நேற்று காலை கப்பலுார் பெருமாள் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்ததும், புதுமணஜோடி கப்பலுார் தேவர் சிலை பகுதியில் உறவினர்கள் சிலருடன் சென்று கொண்டிருந்தனர்.
