உக்ரைனில் தீவிரமடையும் ரஷிய தாக்குதல்: 3 போ் உயிரிழப்பு; உளவுத் தலைமையகம் சேதம்
அமைதிப் பேச்சுவாா்த்தைக்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள சூழலில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
உக்ரைனின் ஒடேஸா மற்றும் டினிப்ரோ பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 போ் உயிரிழந்தனா்; தலைநகா் கீவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த ட்ரோன் தாக்குதலில் உளவுத் தலைமையகத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதால், ரஷியா-உக்ரைன் அமைதிப் பேச்சுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அண்மையில் விமா்சித்திருந்தாா். இந்நிலையில், ரஷியாவின் பொருளாதார மாநாட்டில் வியாழக்கிழமை பேசிய அதிபா் புதின், உக்ரைனுடனான போரில் அமைதி உடன்பாடு எட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக நோ்மறை சமிக்ஞையை வெளியிட்டிருந்தாா்.










/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
