பட்டாபிராமில் திடீர் மழையால் 2 மணி நேரம் மின்வெட்டு
ஆவடி: பட்டாபிராம் வடக்கு பகுதியில் நேற்று இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
அக்னி நட்சத்திரம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் கோடை வெயிலின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு தினங்களாக ஆவடி அருகேயுள்ள இந்து கல்லுாரி பகுதியில் உள்ள சி.டி.எச்., ‘பீடர்’ எனும் மின் ஊட்டியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக பட்டாபிராம் வடக்கு பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மாலை, ஆவடி, திருநின்றவூர், திருவேற்காடு, பூந்தமல்லி சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

