இரண்டாம் திருமணம்: அ.தி.மு.க., மாஜி எம்.பி.,க்கு 2 ஆண்டு சிறை
திருவள்ளூர்: இரண்டாவது திருமணம் செய்த முன்னாள் அ.தி.மு.க., - எம்.பி., ஜெகநாதன், 69, என்பவருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த ஆண்டரசன்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 69.
இவர், 1977ம் ஆண்டில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, ஸ்ரீபெரும்புதுார் எம்.பி.,யாக தேர்வானார்.





