இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரியில் புகையிலை எதிர்ப்பு அருங்காட்சியகம் திறப்பு
புதுச்சேரி: கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் கல்லுாரியில் புகையிலை எதிர்ப்பு அருங்காட்சியகம் (ஸ்பார்க்) அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
புதுச்சேரி மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம், கலெக்டர் அலுவலகம், சமூக நலத்துறை இயக்குனரகம் மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமூக மருத்துவத் துறை ஆகியன சார்பில், புகையிலை எதிர்ப்பு அருங்காட்சியகம் (ஸ்பார்க்) அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் மாநில நோடல் அதிகாரி வெங்கடேஷ் வரவேற்றார். அருங்காட்சியகத்தை கலெக்டர் குலோத்துங்கன் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.


