சில வரி செய்திகள்...
குழந்தைகளை பாதுகாக்க ‘ஆன்லைன்’ தடுப்பு சுவர் சமூக ஊடகங்கள் மற்றும் ‘டிஜிட்டல்’ தளங்களில், பாலியல்
சமூக ஊடகங்கள் மற்றும் ‘டிஜிட்டல்’ தளங்களில், பாலியல் சுரண்டல் மற்றும் ஆபத்தான உள்ளடக்கங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு இம்மனுவை நேற்று விசாரித்து பிறப்பித்த உத்தரவில், ‘தற்போதைய டிஜிட்டல் உலகில், குழந்தைகள் பாதுகாப்பாக செயல்பட தேவையான தடுப்புச் சுவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஒழுங்குமுறை அதிகார அமைப்புகள் பதில் அளிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
டில்லி ஐகோர்ட் ‘குட்டு’