உயர்கோபுர மின்விளக்குக்கு மின் இணைப்பு வழங்கல்
பள்ளிப்பட்டு: கூட்டு சாலையில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குக்கு நேற்று மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிப்பட்டில் இருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் கூட்டுச்சாலையில், பள்ளிப்பட்டு நீதிமன்ற வளாகம், தீயணைப்பு நிலையம், வனத்துறை அலுவலகம், வேளாண் விரிவாக்க மையம், உணவு பொருள் பாதுகாப்பு கிடங்கு உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இதனால், இந்த கூட்டுச்சாலை பகுதி, தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. வாகனங்களின் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இப்பகுதியில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.