பொறியியல் பணிகள்: சில ரயில்களின் சேவையில் மாற்றம்!
பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு-திருச்சி விரைவு ரயிலானது (16844) செப். 5, 8 ஆகிய தேதிகளில் பாலக்காடு - புகழூா் இடையே மட்டும் இயங்கும். பணிகள் நிறைவடைந்ததும் புகழூா் - திருச்சி இடையே முன்பதிவற்ற ரயிலாக இயக்கப்படும்.
வழித்தட மாற்றம்: நாகா்கோவில் - கச்சகுடா வாராந்திர விரைவு ரயிலானது (16354) செப். 5-ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.









