த.வெ.க., அரசு 4 மாதங்களில் தோல்வி அடைந்துவிட்டது: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
திண்டுக்கல்:''த.வெ.க., அரசு 4 மாதங்களில் தோல்வி அடைந்துவிட்டது; இடைத்தேர்தலில் மக்கள் தக்க பதில் அளிப்பார்கள்'' என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து பேசியதாவது:
இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். தாராபுரம் த.வெ.க., வேட்பாளர் செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அ.தி.மு.க.,விற்கு துரோகம் செய்தவர்களுக்கு இடைத்தேர்தலில் பாடம் புகட்டப்படும்.



