குன்னூர் கோடேரி சாலையில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம்... பீதியில் உறைந்த பொதுமக்கள்..!
குன்னூர் - மஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடேரி கிராமத்தில் இரவு ஒரு சிறுத்தை சாலையில் நடந்து சென்ற காட்சிகள் வாகன ஓட்டிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், குன்னூர்-மஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடேரி கிராமத்தில் நேற்று இரவு நேரத்தில் ஒரு சிறுத்தை சாலையில் நடந்து சென்ற காட்சிகள் வாகன ஓட்டிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதிகளைக் கொண்டிருப்பதால், புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டு மாடு போன்ற பல்வேறு வனவிலங்குகள் இங்கு வாழ்கின்றன. சமீபகாலமாக, இந்த வனவிலங்குகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகாமையில் உலா வருவது வழக்கமாகிவிட்டது. பல பகுதிகளில் சிறுத்தை, கரடி மற்றும் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

