பரமக்குடி, மானாமதுரைக்கு பஸ் இல்லை தொலைதுார பஸ்களும் நிறுத்த மறுப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அரசு பஸ்கள் இடை நிறுத்தங்களில் நிற்காததால் மக்கள் அவதியடைகின்றனர். தொலைதுார பஸ்களையும் 1 டூ 1 என விதிகளை மீறி இயக்குவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். எனவே ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி, மானாமதுரைக்கு தனியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
ராமேஸ்வரம், ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு தினமும் 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இவை அனைத்தும் 1 டூ 1 என பெயரிட்டு இடை நிறுத்தங்களில் நிற்காமல் செல்கின்றனர்.
இதை தவிர்த்து பிற பஸ்கள் அனைத்தும் பரமக்குடி, மானாமதுரை ஆகிய முக்கிய நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



