மின் உற்பத்திக்கு நீர் திறப்பு சோலையாறு அணையில் நீர்மட்டம் சரிவு
வால்பாறை: மின் உற்பத்திக்காக தண்ணீர் திறப்பதால், சோலையாறு அணையின் நீர்மட்டம், 83 அடியாக சரிந்தது.
வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்கிறது. எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் உயர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பருவ மழை நிறைவடையும் தருவாயிலும், பாசன திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான சோலையாறு அணை நிரம்பாததால், பி.ஏ.பி., விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

