திருமூர்த்தி அணையில் முழுமையான பாதுகாப்பு மதிப்பீட்டு குழு ஆய்வு
உடுமலை: உடுமலை திருமூர்த்தி அணையில், அணையின் முழுமையான பாதுகாப்பு மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக நீர் வளத்துறை சார்பில், மாநில அளவிலான அணை பாதுகாப்பு அமைப்பு சார்பில், அணைகளின் கட்டமைப்பு பாதுகாப்பு, நீரியல் பாதுகாப்பு, இயந்திரங்கள் மற்றும் மின் உபகரணங்களின் நிலை, அணையின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து, அணை பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட, ‘அணையின் முழுமையான பாதுகாப்பு மதிப்பீடு குழு’ ( சி.டி.எஸ்.இ.,) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் வல்லுனர் குழுவான, மத்திய நீர் ஆணையத்தின் தலைவர், பஜாஜ் தலைமையில், புவி தொழில்நுட்ப வல்லுனரும், ஐ.ஐ.எஸ்.சி., கட்டட பொறியியல் துறை இணைப்பேராசிரியர், ஸ்ரீ வல்சா கோலந்தையார், தமிழக நீர்வளத்துறை ஓய்வு பெற்ற தலைமைப்பொறியாளர்கள், நீரியல் நிபுணர் பரந்தாமன், வடிவமைப்பு நிபுணர் செல்வம் ஆகியோரை கொண்ட குழுவினர், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் ஒன்றான, உடுமலை, திருமூர்த்தி அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.


