கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தல்
பல்லடம்:கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு பல்லடம் உலகத் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவன சுந்தர்ராஜன் கூறியதாவது:
திருப்பூர், கோவை மாவட்டத்தில், பல லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. விவசாய விளைபொருட்களை மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதற்காக துவங்கப்பட்ட எங்கள் நிறுவனத்தில் 1,200க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.


