ஊரக வளர்ச்சி நிறுவனத்துக்கு ஆலோசகர் நியமனம்
சென்னை: மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் ஆலோசகராக பழனிதுரை என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் துறை செயலர் பிரசாந்த் எம்.வடநரே வெளியிட்ட அறிவிப்பு:
செங்கல்பட்டு, மறைமலை நகரில் மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறு வனத்தில், கிராம ஊராட்சிகளின் திறன் மேம்பாட்டுக்கான கவுரவ ஆலோசகராக, திண்டுக்கல் காந்தி கிராமம் நிகர்நிலை பல்கலை முன்னாள் பேராசிரியர் பழனிதுரை தற்காலிகமாக நியமனம் செய்யப்படுகிறார்.


