கஞ்சா... மது... ரௌடிகள்... ‘திக்திக்’ தஞ்சாவூர் அரசுக் குடியிருப்பு!
“காலி வீடுகளுக்குள்ள கஞ்சா பதுக்கி வெச்சு விக்கிறாங்க. இளைஞர்கள் கும்பலா வந்து வீட்டுக்குள்ள போவாங்க; கொஞ்ச நேரத்துல பார்த்தா வீடே புகையா இருக்கும்.
“பகலில் குழந்தைகள் விளையாடும் மைதானமாகவும், இரவில் கஞ்சாவும் மதுவும் விற்கும் ஸ்பாட்டாகவும் விளங்குகிறது. போதாக்குறைக்கு, பூட்டிக்கிடக்கும் வீடுகளைத் திறந்து குற்றவாளிகள் பதுங்குகின்றனர். வாழ்வதற்காக வீடு கேட்டோம்... இப்போது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறோம்’’ என்று `பகீர்’ புகார் கிளப்புகிறார்கள் தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி அரசுக் குடியிருப்புவாசிகள்.
தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார் பட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட இந்தக் குடியிருப்பில், நகரப் பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டவர்களுக்கும், வீடில்லாதவர்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.



