நீர் நிலைகள் பாதுகாப்பு சங்க கவன ஈர்ப்பு கூட்டம்
செஞ்சி: செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் நலன் மற்றும் நீர ்நிலைகள் பாதுகாப்பு சங்கம், வடக்கு மண்டல விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு, அரசியல் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் நடந்தது.
மாநில துணைத் தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர்கள் ரவி, வெங்கடேன், விவசாய சங்கம் ஸ்ரீதர், கிருஷ்ணன், குமார் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் அறவாழி வரவேற்றார்.
கூட்டத்தில், நந்தன் கால்வாய் இணைப்பு திட்டத்திற்கு, 28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி. செஞ்சி தொகுதியில் பெஞ்சல் புயலால் சேதமடைந்த சோகுப்பம், பாக்கம், புதுப்பாளையம் பகுதி கால்வாய்களை சீரமைக்க 74.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்.


