கார்கே மேடை ‘சுத்திகரிப்பு சடங்கு’... 29 நாள்களுக்குப் பிறகே எஃப்.ஐ.ஆர்... சட்டம் சம்பிரதாயத்துக்கா?
`கார்கே ஒரு தலித் என்பதால் இத்தகு தீண்டாமை ‘சுத்திகரிப்பு’ மத சடங்கை நடத்தியுள்ளனர்’ என்று காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றிய பொதுக்கூட்ட மேடையில், அவர் தலித் என்பதால் ‘சுத்திகரிப்பு’ சடங்கு நடத்தப்பட்டது, தேசத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. 29 நாள்களுக்குப் பிறகுதான், சம்பந்தப்பட்டவர்கள் மீது தற்போது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது, மேலும் அதிர்ச்சி தருகிறது.
என்ன நடந்தது?


