மோசடி! - கைவரிசை காட்டிய சதுரங்க வேட்டை கும்பல்!
"எனக்கு அமைச்சர் நெருக்கம். உங்க பையனுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன்''” என்று கூறி, பல லட்சம் வசூல்செய்துவிட்டு, போலி பணிநியமன ஆணையை வழங்க, ஏமாந்த நபர் போலீசில் புகார்கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று நக்கீரனின் கதவைத் தட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம், ஜமீன்பல்லாவரம், ஆர்.கே.வி. நகரைச் சேர்ந்த ஜெயசீலன் என்கிற சிவகுமார் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். "நான் திருச்சி இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் பணியாற்றியவன். கடந்த 2016 ஆம் ஆண்டு பணியிட மாற்றமாக சென்னை வந்தேன். அங்கு பணியாற்றியபோது எனக்கு மேரி, அவரது கணவர் சாகுல் ஆகியோர் பழக்கமாகினர். கடந்த 2020-ஆம் ஆண்டு பணி ஓய்வுபெற்று பல்லாவரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறேன். மகன் பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன் படித்த நிலையில், சாகுல் என்னிடம், அவர்களுக்குத் தெரிந்த சேலத்தைச் சேர்ந்த தயாநிதி, அரக்கோணத்தை சேர்ந்த சதீஷ் ஆகியோர் அமைச்சர்கள், உயரதிகாரிகள் மூலம் அரசு வேலை வாங்கித்தருகிறார்கள். எனது மகனுக்கும் தமிழக அரசின் வேலை வாங்கிக்கொடுப்பார்கள் என்று அறிமுகம் செய்துவைத்தார்.
அவர்களிடம் பேசியபொழுது, உங்கள் மகனுக்கு மட்டுமல்ல, அமைச்சர்களின் தனி கோட்டா மூலம் உங்களுக்குத் தெரிந்தவர் களுக்குக்கூட அரசு வேலை வாங்கித்தரலாம் என்று, கையில் வைத்திருந்த சில பணிநியமன ஆணைகளை என்னிடம் காட்டி நம்பவைத்தனர். அமைச்சர்கள் தங்கும் மயிலாப்பூர் அருகேயுள்ள அரசு பங்களாவுக்கு அழைத்துச்சென்றனர். அமைச்சர்களை சந்தித்துப் பேசியதாகவும், தற்போது டிகிரி முடித்த வர்களை வெவ்வேறு துறைக்கு அமைச்சர் கோட்டாவின் மூலம் தேர்வுசெய்கிறார்கள். உங்கள் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களை அறிமுகம் செய்துவையுங்கள். குறைந்த பணத்தில் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறினார்கள்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



