மனைவியின் காதலனுக்கு கத்திக்குத்து.. மன உளைச்சலில் கணவன் செய்த அதிர்ச்சி செயல்
ஆம்பூரில் மனைவியின் கள்ளக்காதலனை கத்தியால் குத்திய கணவன் தற்கொலை. கள்ளக்காதலன் வசந்த்குமார் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை கணவன் கத்தியால் குத்தி இருக்கிறார். மனைவியால் மன உளைச்சலில் இருந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாலசந்திரன், ஆம்பூரில் உள்ள ஸ்டிக்கர் கடையில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு காவ்யா என்பவருடன் திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. பாலசந்திரனின் மனைவி காவ்யாவுக்கும், மின்னூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வசந்த்குமாருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.


