குண்டூர்-திருப்பதி ரயில் திருச்சி வரை நீட்டிப்பு: விருத்தாசலம் பக்தர்கள், பயணிகள் மகிழ்ச்சி
விருத்தாசலம்: குண்டூர் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி வரை நீட்டித்து ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளதால், விருத்தாசலம் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையம் வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என பொது மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து விஷ்ணுபிரசாத் எம்.பி., பாராளுமன்றத்தில் பேசியதோடு, ரயில்வே அமைச்சரிடம் கடிதம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், குண்டூர் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலை (17261), குண்டூர் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலாக (17261) நீட்டிப்பு செய்து ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


