ஆன்மிக நகரத்தில் பெருகும் அசிங்கங்கள் !
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த போலீசார் இரண்டு கார்களில் வந்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகில், இரட்டை பிள்ளையார் கோவில் தெருவிலுள்ள சிவா ரெசிடென்சி என்கிற லாட்ஜில் செப்டம்பர் இரண்டாம் தேதி இரவு திடீரென ஆய்வு செய்தனர். இதுகுறித்து கர்நாடக காவல்துறை தரப்பில் நாம் விசாரித்தபோது, திருப்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்துகொண்டிருந்த திருவண்ணாமலை அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார். இது தெரிந்த அந்த சிறுமியின் குடும்பத்தார், அச்சிறுமியை மைசூரிலுள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்துள்ளனர். அங்கு சென்ற அந்த இளைஞன், அச்சிறுமியை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தி லேயே திருப்பூர், சேலம், திருவண்ணாமலை என அங்கங்கு ரூம் எடுத்து தங்கியுள்ளான். பின்பு கர்நாடக போலீசார் இவர்களை கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். அந்த சிறுமி தந்த வாக்குமூலத்தில், தாங்கள் எங்கெங்கே தங்கினோமென்று கூறி யுள்ளார். வாக்குமூலத்தில் சொன்ன இடங் களுக்கு கர்நாடக போலீசார் நேரில் சென்று ஆதாரங்களை சேகரிக்கின்றனர். இதற்காகவே திருவண்ணாமலை வருகை தந்துள்ளனர்.
16 வயது சிறுமியிடம் எந்த ஆவணமும் வாங்காமல் சிவா லாட்ஜில் காதலனோடு தங்க ரூம் தந்துள்ளார்கள். இது கர்நாடகா போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து அந்த லாட்ஜ் உரிமையாளரான விமல் சிவஞானத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரோ தனது மேலாளரை கைகாட்டியுள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டு புறப்பட்டனர்.
ஆன்மிக நகரான திருவண்ணாமலைக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவைச் சேர்ந்த 70 சதவீதம் பேர் வருகின்றனர். சமீப காலங்களாக இளையோர்கள் குருப், குரூப்பாக வருகின்றனர். இங்கு வருபவர்கள் ஆன்மிகத் துக்காக வருகிறார்களா? ஆசையை பூர்த்தி செய்ய வருகிறார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது இச்சம்பவம்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


