வேலை கிடைக்காமல் தவித்தவருக்கு வழித்துணை பாபா காட்டிய வழி! சாயி மகானின் அற்புதங்கள்! - சாய்ராம்ஜி
"என்னோட பேர் கார்த்திக். நான் திருவண்ணாமலை பக்கம். படிச்சு முடிச்சு பத்து வருஷமா வேலை தேடி அலைஞ்சுட்டே இருந்தேன். எங்க போனாலும் "பிறகு கூப்பிடு றோம்'ன்னு சொல்லிடுவாங்க. ஆனா அந்த "பிறகு' மட்டும் வரவே வரல. வீட்டுல அம்மா, அப்பா என்னை நம்பித்தான் இருந்தாங்க. நானோ தினமும் மனசுக்குள்ள உடைஞ்சுட்டே இருந்தேன். ஒரு கட்டத்துல, "என்னால இனிமே எதுவுமே முடியாது போல'ன்னுகூட தோண ஆரம்பிச்சிடுச்சு.
அப்பதான் எங்க அத்தை, "ஒரு தடவை வண்டலூர் வழித்துணை பாபா கூட்டு பிரார்த்தனைக்கு வா. பாபாகிட்ட மனசார சொல்லு'ன்னு சொன்னாங்க. நானும் சரி, "ஒரு தடவை போய்ப் பார்த்துடலாம்'னு வந்தேன்.
அங்க போய் வழித்துணை பாபாவை பார்த்தவுடனே, ஏனோ மனசுக்குள்ள இருந்த பாரம் உடைஞ்ச மாதிரி ஆயிடுச்சு. கூட்டு பிரார்த்தனையில உட்கார்ந்திருந்தப்போ, நான் மட்டும் இல்ல, என்ன மாதிரி எவ்வளவோ பேர் கஷ்டத்தோட வந்திருக்காங்கன்னு புரிஞ்சது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
