வானிலை மாற்றத்தை அறிய டாப்லர் ரேடார் கருவிகள்: திருச்சி, நீலகிரியில் நிறுவ திட்டம்
சென்னை: தமிழகத்தில் மழை மேகங்களின் நகர்வை துல்லியமாக அறிய, கன்னியாகுமரி, திருச்சி, நீலகிரி மாவட்டங்களில், மத்திய அரசின் வானிலை துறை வாயிலாக, 'டாப்லர் ரேடார்' கருவிகள் நிறுவப்பட உள்ளன.
தமிழகத்தில் வானிலை மாற்றங்கள், மழை மேகங்களின் நகர்வு குறித்து அறிய, டாப்லர் ரேடார் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. உயரமான கட்டடங்களில் மட்டுமே, இந்த கருவிகளை நிறுவ முடியும்.
கடலியல் ஆய்வு அந்த வகையில், தற்போது சென்னை துறைமுகம், பள்ளிக்கரணை தேசிய கடலியல் ஆய்வு நிறுவனம், காரைக்கால் ஆகிய இடங்களில் மட்டுமே டாப்லர் ரேடார் வசதி உள்ளது.


