லஞ்ச ஒழிப்பு துறை கைவிரிப்பால் தப்பி ய கட்டிங் அதிகாரி!
“மீனவர் சமுதாயத்துக்கு பதவி வழங்க முடிவு பண்ணியிருக்கா ஓய்...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
“எந்த கட்சியில பா...” என பட்டென கேட்டார் அன்வர்பாய்.
“சென்னை, திருவொற்றியூர் த.வெ.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமார், மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்... இவரை எதிர்த்து அரசியல் செய்ய, தி.மு. க., - அ.தி.மு.க., வில் சரியான தலைமை இல்லாம, தொண்டர்கள் திண்டாடிண்டு இருக்கா ஓய்...


