மருத்துவ கல்லுாரியில் படித்தவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு
சென்னை: சென்னை மருத்துவக் கல்லுாரியில், 50 ஆண்டுகளுக்கு முன் படித்த டாக்டர்கள் சந்தித்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சென்னை மருத்துவக் கல்லுாரியில், 1976 – 1981ம் ஆண்டுகளில், மருத்துவ படிப்பு முடித்த முன்னாள் மாணவர்களின், 50வது ஆண்டு பொன்விழா சந்திப்பு நிகழ்ச்சி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், தமிழகம், வெளிமாநிலங்கள் மற்றும் ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றும் டாக்டர்கள், 110 பேர் வந்திருந்தனர்.


