பாலாற்றில் ரூ.530 கோடியில் தடுப்பணைகள் கட்டும் திட்டம் மறந்து போச்சு! 6 ஆண்டாக அரசு கிடப்பில் போட்டதால் விவசாயிகள் விரக்தி
மாமல்லபுரம்: வடகிழக்கு பருவகால மழைநீரை தேக்கி வைக்கும் வகையில் பாலாற்றில் கூடுதலாக இரண்டு இடங்களில், 530 கோடி ரூபாயில் தடுப்பணைகள் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளாகியும், நிதி ஒதுக்காமல் அரசு இழுத்தடித்து வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பொதுப்பணித்துறையின் பரிந்துரைகளை துாசி தட்டி, த.வெ.க., அரசு தடுப்பணைகளை கட்ட நிதி ஒதுக்க வேண்டும் எனவும், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் தோன்றும் பாலாறு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக பாய்ந்து, கல்பாக்கம் அடுத்த வாயலுார் - கடலுார் பகுதியில், வங்க கடலில் கலக்கிறது.
செங்கல்பட்டு மாவட்ட மக்களின் குடிநீர் நீராதாரமாகவும், விவசாய பாசன நீராகவும் பாலாறு உள்ளது. இந்த பாலாற்றை ஒட்டி தொடரும் மணல் திருட்டு, மணல் குவாரிகளாலும் சீரழிந்து வந்தது.





