மன உளைச்சலில் திருமணம் ஆகாத ஆண்கள்!
“நீங்க சொல்றது சரிதான் வித்யாக்கா. கரை களை ஒட்டி பில்டிங்குகளா இருக்கு. ஆற்றுல வெள்ளம் வரும்போது ஓடறதுக்கு வழியில்ல
வினுவும் விமலும் வித்யாவின் வீட்டுக்குள் சென்றபோது, நேபாளத்தில் நிகழ்ந்த பெருவெள்ளத்தின் காட்சிகளை பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தார் வித்யா.
“ரொம்ப ரொம்ப மோசமான பெருவெள்ளம். இப்படி ஒரு காட்சியை சினிமாலகூடப் பார்த்திருக்க மாட்டோம்” என்றாள் வினு.
“ஒரு சில நிமிடங்கள்ல எல்லாத்தையும் வாரிச் சுருட்டிக்கிட்டுப் போயிருச்சு. எத்தனை உயிர்கள்… எத்தனை கட்டடங்கள்… பாலங்கள்… சாலைகள்… நீர்மின் நிலையங்கள்னு எவ்வளவு இழப்பு” என்றாள் விமல்.


