கரகம், விளையாட்டு, ஓவியம்... சாதனை மேல் சாதனை!
‘‘சின்ன வயசுல இருந்தே படங்கள் வரையறதுல ஆர்வம் உண்டு. பல ஓவியப் போட்டிகள்ல கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கியிருக்கா.
மாற்றுத்திறனாளி மகள், தலையெழுத்தை மாற்றிய தாய்!
கிருஷ்ணவேணியின் கதையைக் கேட்டால், ‘இயற்கையின் மொழிகள் புரிந்துவிடின் மனிதருக்கு மொழியே தேவையில்லை’ என்ற பாடல் மனதுக்குள் ஒலிக்கும்.
உடல்ரீதியான சவால்கள் சாதிப்பதற்கு ஒருபோதும் தடையாக இல்லை என்பதற் கான மற்றோர் உதாரணமாக இருக்கிறார் கிருஷ்ணவேணி. அரியலூர் மாவட்டம் பெரியதிருகோணம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி. பிறவியிலேயே காது கேளாமை மற்றும் பேசுவதில் சிரமம் இருந்தாலும், அதைத் தனது வாழ்க்கைக்குத் தடையாக கிருஷ்ணவேணி ஒருபோதும் நினைத்ததில்லை. அதற்கு மிக முக்கியக் காரணம் அவரின் அம்மா மாலா.


