சா்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் குட்ஷெப்பா்டு பள்ளி மாணவா்கள் சாதனை
இங்கிலாந்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் உதகை குட்ஷெப்பா்ட் பள்ளி மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.
துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெற்றி பெற்ற குட்ஷெப்பா்டு இன்டா்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள்.
உதகையில் உள்ள குட்ஷெப்பா்ட் இன்டா்நேஷனல் பள்ளியின் துப்பாக்கிச் சுடுதல் அணி, இங்கிலாந்தில் நடைபெற்ற 32-ஆவது ஜூனியா் சா்வதேச துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றது. இப்போட்டியில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் கலந்துகொண்டனா்.

