6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
அடுத்த கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு சிபிஎஸ்இக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
அடுத்த கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு சிபிஎஸ்இக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் ஜூலை 1 முதல் மும்மொழி பாடத் திட்டத்தைக் கட்டாயமாக்கி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அண்மையில் சுற்றறிக்கை வெளியிட்டது.



