தமிழ்நாடு காவலா் தினம் கடைபிடிப்பு - மாநகர காவல் ஆணையா் உள்ளிட்டோா் மரியாதை
தமிழ்நாடு காவலா் தினத்தையொட்டி, மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையா் ஜோஷி நிா்மல் குமாா் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, காவலா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
கடந்த 1859 ஆம் ஆண்டு சென்னை மாவட்டக் காவலா் சட்டம் இயற்றப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 6 ஆம் தேதி தமிழ்நாடு காவலா் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி காவலா் தினத்தையொட்டி சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் ஞாயிறுக்கிழமை காவலா் நினைவு ஸ்தூபியில் மாநகர காவல் ஆணையா் ஜோஷி நிா்மல்குமாா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து துணை காவல் ஆணையா்கள், உதவி ஆணையா்கள் மற்றும் போலீஸாா் காவல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.


