கேங் வார்! மலேசியா Vs காரைக்குடி!
வெவ்வேறு வாகனங்களில் வந்து பெட்ரோல் பல்க்கில் எரிபொருள் நிரப்பும்போது, இரு தரப்பிற்கிடையே நடந்த எதேச்சையான சண்டையாகத் தான் முதலில் அந்த சண்டையைக் கருதியிருக்கிறது கோவை மாவட்ட போலீஸ். ஆனால் தொடர் விசாரணையில், சிங்கப்பூர் தங்கத்திற்காக இரு குழுக்களிடையே நடந்த பிரச்சனை என்பதும், இதில் ஒரு குழுவிற்கு தலைமையே காரைக்குடியை சேர்ந்த போலீஸ் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தற்பொழுது இந்த விவகாரம் மலேசிய துணைத்தூதரகம் வரை செல்ல, தலையை தொங்க விட்டுள்ளது தமிழ்நாடு காவல்துறை.
மலேசியாவின் லிட்டில் இந்தியாவை சேர்ந்த லோகேஸ்வரன், யுகேந்திரன் உள்ளிட்ட சுமார் 10 நபர்கள் சுற்றுலாவிற்காக கடந்த மாதம் 25ஆம் தேதி இந்தியா வந்துள்ளனர். அதே தினத்தில், தமிழ்நாட்டிலிருந்து TN11BY1771 என்ற பதிவெண் கொண்ட Force Urbania வாகனத்தின் மூலம் கேரளா வந்திருக்கின்றனர். சுமார் நான்கைந்து நாட்களாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றவர்கள், கடந்த 2ஆம் தேதியன்று கோவை மாவட்டத்திற்கு திரும்பி யிருக்கின்றனர். "பாலக்காடு சாலையிலுள்ள நவக்கரை கே.ஜி.சாவடிக்கு அருகிலுள்ள பெட்ரோல் பல்க்கில் சுற்றுலாப்பயணிகள் வந்த வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பினர். அப்போது அந்த வாகனத்தில் வந்தவர்கள் அங்குள்ள கழிவறைக்கு சென்றபோது, ஏற்கனவே அங்கிருந்த இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அவர்களும் இங்கு எரிபொருள் நிரப்ப வந்தவர்கள் தான் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஒருகட்டத்தில் அவர்கள் Force Urbania வாகனத்திற்குள் ஏறி, வாளால் தாக்கினர். இரு தரப்பும் மோதிக்கொண்டதில் மலேசியாவை சேர்ந்த இருவருக்கு கையி லும் வயிற்றிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. கூட்டமும் பல்க்கில் அதிகமாக இருக்க, மலேசிய சுற்றுலாப்பயணிகள் அணிந்திருந்த ஒரு சில நகைகளை மட்டும் (ஏறக் குறைய 90 பவுன்) பறித்துக்கொண்டு அந்த மர்ம கும்பல் எஸ்கேப் பானது.'' என்கிறார் பல்க்கில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்.
சாவகாசமாகவே சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் குறித்தும், சுற்றுலாப்பயணிகள் குறித்தும் விசாரணையை தொடங்கினர் கே.ஜி.சாவடி போலீஸார். "காயம்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பிக்க வாகனம் புறப்பட்டது. ஆனால் அந்த வாகனத்தை இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு கார் மூலம் பின் தொடர்ந்து மீண்டும் விரட்டி வந்துள்ளது மர்ம கும்பல். வாகன ஓட்டுநரும் சளைக்காமல் வேகமாக வாகனத்தை ஓட்டி தப்பித்த நிலையில், மதுக்கரை மார்க்கெட் அருகில் துப்பாக்கி முனையில் அந்த வாகனத்தை நிறுத்தியிருக்கிறது அந்த கும்பல். இதில் பதட்டமடைந்த டிரைவர் வேகமாக சாலை யோரத்தில் வாகனத்தை நிறுத்தியிருக்கின்றார். அந்த சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் கூடவும், சுதாரித்துக்கொண்டு ஓடியுள்ளது அந்த மர்ம கும்பல். தொடர்ந்து ரத்தக்காயத்துடன் இருந்த இருவரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மதுக்கரை மார்க்கெட் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன் சம்பவம் தொடர்பாக மதுக்கரை காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.'' என்கின்றது மதுக்கரை காவல் நிலையம்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


