தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஊடகவியலாளர்கள் பயிற்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் நடந்தது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, தென்மண்டல பத்திரிகை தகவல் அலுவலகத்தின் பொது இயக்குநர் பழனிசாமி தலைமை தாங்கினார். சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் அருண்குமார் வரவேற்றார். மாவட்டம் முழுதுமிருந்து 65க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சென்னை பி.ஐ.எஸ்., தரச்சான்று நிறுவனத்தின் தென்மண்டல அலுவலக தர மேம்பாட்டு அலுவலர் ஜெயஸ்ரீ, தங்கம், வெள்ளி நகைகளில் உள்ள பி.ஐ.எஸ்., எண்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றில் ஐ.எஸ்.ஐ., சான்றுகளின் உண்மைத்தன்மையை செல்போன் செயலியை பயன்படுத்திட கண்டறிவதன் வழிமுறைகளை விளக்கினார்.

