சைனிக் பள்ளியில் திறனாய்வு போட்டி பல மாவட்ட பள்ளிகள் பங்கேற்பு
உடுமலை: அமராவதி நகர் சைனிக் பள்ளியில் ‘பிராஜனா’ என்ற தலைப்பில் நடைபெற்ற திறனாய்வு போட்டிகளில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் திறன்களை வெளிப்படுத்தினர்.
உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில், பள்ளி மாணவர்களிடையே புதுமையான சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் திறன்களை ஊக்குவிக்கும் வகையில், சைனிக் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் ‘பிராஜனா’ திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளில், ஈரோடு, கோவை, மதுரை, சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 25 பள்ளிகளில் இருந்து, 400க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.





