தாக்குதல், துப்பாக்கியை காண்பித்து மிரட்டல் விடுத்ததாக பரஸ்பர புகாா்: ஊராட்சித் தலைவா், மருமகன் கைது
குடும்பத் தகராறில் ஆதனூா் ஊராட்சி மன்றத் தலைவரை துப்பாக்கியை காண்பித்து மிரட்டியதாக அவரது மருமகனையும், மருமகனை ஆள்களை வைத்து தாக்கியதாக ஊராட்சித் தலைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம், ஆதனூா் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவா் தமிழ்அமுதன். இவரது மகள் ஓவியாவின் கணவா் தமிழ்செல்வன். மருத்துவரான தமிழ்செல்வன் அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், தமிழ்செல்வனுக்கும், அவரது மனைவி ஓவியாவிற்கும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக இருவரும் கடந்த சில நாள்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனா். இது குறித்து பேச்சு நடத்துவதற்காக ஆதனூா் ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்அமுதன் தனது மருமகன் தமிழ்செல்வனை திங்கள்கிழமை தனது வீட்டுக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளாா்.


