மதுரை அரசு மருத்துவமனை, மாநகராட்சி இடையே பனிப்போர்: குப்பை அள்ளாமல் கேள்விக்குறியாகும் சுகாதாரம்
மதுரை; மாநகராட்சி ஒத்துழைப்பின்மையால் மதுரை அரசு மருத்துவமனையில் ஆக. 12 முதல் குப்பை அள்ளப்படாமல் தேங்கி டாக்டர்கள் பணியாளர்கள், நோயாளிகள் அவர்களது உறவினர்களுக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.
அரசு மருத்துவக் கல்லுாரி, அரசு மருத்துவமனை பழைய வளாகம், தீவிர விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு (டி.சி.சி.,), பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகங்களில் (எஸ்.எஸ்.பி.,) மருத்துவக் கழிவுகள் அல்லாமல் வார்டு உட்பட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் 7 டன் அளவு குப்பை சேர்கிறது. 6 மாதங்களுக்கு முன் காலை, மதியம் மாநகராட்சி பணியாளர்கள் குப்பையை அகற்றிய நிலையில் ஒருமுறையாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனை, தொழிற்சாலைகள், ஓட்டல்கள் போன்ற பெரிய நிறுவனங்களில் சேரும் குப்பையை அந்தந்த நிறுவனங்களே எடுத்துச் சென்று வெள்ளக்கல் குப்பைக்கிடங்கில் கொட்ட வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

