டில்லியில் கொட்டி தீர்த்த மழை: விமான சேவை பாதிப்பு
புதுடில்லி: தேசிய தலைநகர் டில்லியில் பல இடங்களில் கனமழை பெய்ததால், விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
டில்லியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று மதியத்திற்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் நடந்து சென்ற மக்கள் பாதுகாப்பான இடத்தை தேடி அலைந்தனர். இதன் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
டில்லி விமான நிலையத்திலும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் உள்நாட்டு விமானசேவை பாதிக்கப்பட்டது. ஆமதாபாத், மும்பை மற்றும் போர்ட் பிளேரில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்குவதில் கால தாமதம் ஆனது.


