எல்லா வளங்களையும் எடுக்க அனுமதிப்பதால் ஆந்திராவுக்கு தொழிற்சாலைகள் செல்கின்றன: காங்., தமிழக தலைவர் கண்டுபிடிப்பு
விருதுநகர்: ''எல்லா வளங்களையும் எடுத்துக்கொள்ள ஆந்திரா அனுமதிப்பதால், அந்த மாநிலத்துக்கு தொழிற்சாலைகள் செல்கின்றன,'' என, காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார்.
விருதுநகரில் அவர் அளித்த பேட்டி: டில்லியில், 'ஊழலுக்கு எதிரான கட்சி' எனக்கூறி ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி, ஊழல் குற்றச்சாட்டுகளாலேயே தோற்றுப்போனது.
தமிழகத்திற்கு புதிய தலைமை செயலகம் அவசியம். ஆனால், சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவர்கள் வசிப்பதால், அவர்கள் நலனை முதல்வர் விஜய் பாதுகாத்து, புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும்.



