தேங்காய் ஏற்றுமதி விலை கிலோ 70 ரூபாயாக உயர்வு
சென்னை: தேங்காய் ஏற்றுமதி விலை இரண்டாண்டுகளுக்கு முன் பு கிலோ சராசரியாக 25 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 55 - 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. தேங்காய் உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துள்ளது என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீன் கூறியதாவது:
நாட்டின் மொத்த தேங்காய் ஏற்றுமதியில் தமிழகம் 31 சதவீதம் பங்களிப்புடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்திலிருந்து கத்தார், குவைத், சவுதி அரேபியா, ஏமன், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கடுத்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகிறது.







